Friday, June 15, 2012

நீர் உருவம்

பாத்திரத்தில்
நிரம்பும் நீர்
பாத்திரமாகிறது
.
முகத்தில்
வழிந்த நீர்
முகமாகிறது
.
தேகத்தில்
வழிந்த நீர்
தேகமாகிறது
.
அதற்கு
உருவமில்லையென
மயக்குகிறாய்
பாத்திரமாகட்டும்
உன் முகம்
தேகமாகட்டும்
எந்த ஒன்றிலும்
அதன்
உருவத்தை
வரைந்து கொள்ளும்
நீர்

No comments:

Post a Comment