Friday, June 15, 2012

பென்சிலை சீவாதே

ஆரம்ப பள்ளி சேர்ந்த காலகட்டம்
மரப்பலகைகள் போடததால்
தரையை தேய்க்கும் காலம்
.
பென்சில் சீவி பூ சேர்ப்பதில்
விசித்திரப்பட
தினமும் ஒரு பென்சில் தேவைப்பட்டது
.
பொறுக்காத வீட்டில் அடிக்கு பயந்து திட்டோடு
தப்பியிருக்கிறேன்
.
சில நாட்கள் தயங்கி
திரும்பவும் பழக்கப்பட்டது
பூ சேர்ப்பதில்
.
அதற்கு இப்பொழுது என்ன
.
உறவினர்கள் தெரிந்தவர்கள் வீட்டிற்கோ போக நேரிட்டால் தன் குழந்தைகள் பென்சில் சீவுவதை பொருளாதார செலவோடு ஒப்பிட்டு பேசும்போது மனதால் குறுகி போகிறேன்.

No comments:

Post a Comment