Sunday, September 16, 2018

Fb Status

" புரிந்து கொள்வது " என்றொரு வார்த்தை. "இவன் இதை செய்ய மாட்டான் ", "இவனால் அது முடியாது"  விட்டுக்கொடுப்போம். குடும்பங்களில் உணர்வுபூர்வமாக இது வெளிப்பட்டாலும், நண்பர்களிடம் வினோதமாக வெளிப்படும்.  இங்கே எப்படி யென்றால் -  "பாக்கெட்ல பத்து ரூபாய் கூட இல்லை. நீ எனக்கு
400 ரூபாய் தரனும். உன் நிலைமை எனக்கு புரியுது. ஆனா இப்பவே கொடுத்தா நல்லது. முடியல கண்டிப்பாக அந்த 400 ரூபாய்க்கு மேலே உனக்கு செலவு வைப்பேன்.."

Saturday, September 15, 2018

பழைய உறவுகளில்
ஏமாற்றத்தையும், துரோகத்தையும்
சந்தித்து பக்குவப்பட்டேன்
புதியதாய் நாம்
சந்திக்கிறோம்
உன் சிரிப்பு
இங்கு மகிழ்ச்சியை
நம்பிக்கையை
ஆழமான தெளிவை
தருகிறது
இத்தனை நாள்களின்
வலிகளுக்கு காயங்களுக்கு
தனிமைக்கு
களிம்பு இடுவதாய்
உன் வரவு
நாம் கைகளை கோர்க்கிறோம்
நாம் இங்கு தொடங்குகிறோம்
அழகான புதிய வாழ்வை
தேடியது ஏதோ ஒன்றை
கிடைத்ததை

Thursday, September 6, 2018

விசனம்

சிறிய விஷயங்களை செய்யும்போது என் கவனம் வர வர மலுங்கி வருகிறது. இது முன்னே இருந்து அப்படிதான். ஒரு விசயத்தை எப்படி முடிபது? எதற்காக  செய்கிறோம் ? எப்படி செய்தால் வேலை எளிது.?  என்பது எல்லாம் வரவே மாட்டேன் என்கிறது. கவனம் இல்லை, பயம், ஞாபக மறதி, பொறுமை இல்லாதது. சிறிய விசயங்களை பொறுத்த வரை மட்டும். பெரிய விசயங்களில் போதும் நல்ல கவனம் இருக்கிறது. சிறிய விசயத்தை தவறினால் திரும்ப செய்யலாம் என்ற அலட்சியம். நிர்வாகத்தில் இது சறுக்கை ஏற்படுத்தும். சில உதாரணங்கள் : கடைக்கு போகிறேன் காய்கறிகள், மாசாலா வாங்கிறேன்‌. அரிசி வாங்க மறதி வந்தது. ஒரு இரவு XL இரவல் வாங்கி ஹோட்டல் சென்றேன். பார்சல் வாங்கி விட்டு வேறோருவர் XL ஐ சாவி போட்டு எடுக்க பார்த்தேன், அதற்குள் விஷயம் உணர்ந்து விழிப்புக்கு வந்தேன். வேலை தொடர்பாக பேசுகையில், இரண்டு முறை விளக்கம் கேட்டு செய்கிறேன். இது பெரும் தவறு. இது எங்கே போய் முடிய போகிறது என்று தெரியவில்லை.

Tuesday, September 4, 2018

என் காதல்

இது வரை ஆறு யேழு பெண்களை காதலிக்கலாமா முடிவு செய்துதிருக்கிறேன்.மூன்று பெண்களிடம் காதல் சொல்லி மறுக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வாழ்க்கைகான வழி , பெண்ணை பொறுத்து என் வாழ்க்கையும் மாறியிருக்கும்.வாழ்க்கையை நெறிப் படுத்த இந்து,கிறிஸ்தவம்,மூஸ்லீம்,புத்த இத்தனை மதம் இருக்கும் போது , ஒரு பெண்ணுவோட காதலும் முறித்தால் இன்னொரு பெண்ணுவோட காதல் நாம் வாழ்க்கையை நெறிப் படுத்தும்.( இதை என் இப்போதைய காதலி பார்த்தால் எனக்கு பஞ்சர் ஆகும்). இது என்னுடைய அனுபவம். என் வாழ்க்கையில் அந்த சம்பந்தப்பட்ட பெண்ணுகளுக்கும் சாரசரி மூன்று ஆண்டுகளுக்காவது இடைவெளி இருக்கும். ஒரு ஆண்டில் மூன்று காதலும் எற்படவில்லை, மறுக்கப்படவில்லை, கடந்து போகவில்லை. இத்தனைக்கும் குடும்பம் , வாழ்க்கையில் அத்தனை இஷ்டமும் இல்லை. ஒவ்வொரு காதலும் ரசனையானது. அது ஒரு காலம் திரும்பி பார்க்கும் போது இழந்தவானாக பதற்றம் அடைகிறேன்.இருந்தாலும் கடைசியாக நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் , எழுத்தை சொல்லி தந்த அனைத்து பெண்ணுக்களுக்கும். - என்னுடைய முதல் புனைவு இது. இந்த பத்தி உண்மையான ஒன்றாககாவும் , புனைவற்ற தன்மையில் தனிமையில் நிற்கிறது.

சுயம் கவிதைகள்

எந்த விஷயத்திற்கு
கோபம் படறதுனே தெரியல.
.
சிம்பிள்.
கோபம் வந்தா
கோபம் படு ....
.
ஓரே பிரச்சினையை போட்டு
ஓலட்டது மனசு 
அதுவும் புதுசா 
எதாவது பிரச்சினை
வர வரைக்கும் தான்
அதுக்கு அப்பறம்
முன்னாடி நடந்த
பிரச்சினை பத்தி
ஏன் னெ கூட
கேட்கமாட்டிங்குது...
.
உலகம் அப்படி தான் சொல்லும்
அதுக்கு வேற வேலையில்லை
உனக்கு வேலையிருக்கா ?
நீ செய்
.
எனக்கு ஒருத்தன் வேணும்
நான் செய்ச எல்லா தப்பும்
அவன் செய்யனும் 
அப்போ தான் 
நானும் இன்னும்
நிறைய தப்பு
செய்ய முடியும்
.
மழை பிடிக்கும்
மழையில் நனைய பிடிக்காது.
.
சில நேரம் எல்லாதையும்
தூக்கி எறியலாம் தோணுது
என்னையும் கூட.....
.
நீ நீயாக இருக்க முடியும்
அடுத்தவனிடம் கண் மூக்கு வாய் வாங்கி 
அவனை போல ஆக முடியாது... 
.
நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன் கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது. 
.