Tuesday, September 4, 2018

எழுத்து

நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த  மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன்  கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது.

No comments:

Post a Comment