Tuesday, September 4, 2018

சுயம் கவிதைகள்

எந்த விஷயத்திற்கு
கோபம் படறதுனே தெரியல.
.
சிம்பிள்.
கோபம் வந்தா
கோபம் படு ....
.
ஓரே பிரச்சினையை போட்டு
ஓலட்டது மனசு 
அதுவும் புதுசா 
எதாவது பிரச்சினை
வர வரைக்கும் தான்
அதுக்கு அப்பறம்
முன்னாடி நடந்த
பிரச்சினை பத்தி
ஏன் னெ கூட
கேட்கமாட்டிங்குது...
.
உலகம் அப்படி தான் சொல்லும்
அதுக்கு வேற வேலையில்லை
உனக்கு வேலையிருக்கா ?
நீ செய்
.
எனக்கு ஒருத்தன் வேணும்
நான் செய்ச எல்லா தப்பும்
அவன் செய்யனும் 
அப்போ தான் 
நானும் இன்னும்
நிறைய தப்பு
செய்ய முடியும்
.
மழை பிடிக்கும்
மழையில் நனைய பிடிக்காது.
.
சில நேரம் எல்லாதையும்
தூக்கி எறியலாம் தோணுது
என்னையும் கூட.....
.
நீ நீயாக இருக்க முடியும்
அடுத்தவனிடம் கண் மூக்கு வாய் வாங்கி 
அவனை போல ஆக முடியாது... 
.
நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன் கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது. 
.


No comments:

Post a Comment