Friday, June 29, 2012

பொழுதுகள்

இந்த காலை
கண்ணில் புகை
அடிக்கிறது
உன் பார்வை
காட்சியை
மங்குலாக்கிறது
.
இந்த பகல் பொழுது
காற்றில் பறக்கும்
பாலிதீன் பைகளின்
விரசம் ஒலி யென
தனிமையை
கட்டி போடுகிறது
.
அந்திமம்
வீணாகிறது
உன் தேநீர்
கோப்பைகளில்
கொஞ்சம்
நிரப்பி கொள்
.
இந்த இரவு
நீ உறங்க போகும்
படுக்கை அறை
கதவிற்கு பின்
ஒழியும் கனவு
உன்னை
கொலை செய்ய
கத்தியில்
விஷத்தை
தேய்க்கிறது

No comments:

Post a Comment