Tuesday, November 13, 2012

தேககூடலினி

என் கவிதைகளில்
ஊடல் குறிப்புகளை மட்டும்
பிய்த்து பார்க்கிறாள்
என் குறிப்புகள்
என்னிடம் தொடர்பு கொண்டவர்களின்

குறிப்புகளாய் இருக்க
உண்மையென இதையும்
உறுதியிட்டு
இரகசியம் பிடுங்க
பார்க்கிறாள்
பெண் வாசமற்ற
என் தடங்களை பற்றி
அவள் அறியமால்
.
ஒரு மடிந்த மாலையில்
ஊடல் குறிப்புகள் கேட்டு அறிந்தபின்
மீள் சந்தேகங்களுக்கு
யாரையும் சார்ந்திருக்காதே
என்கிறாள்
எனக்கேற்ற தேககூடலினி

No comments:

Post a Comment