Tuesday, November 13, 2012

உன் வர்த்தைகளால் உடைந்த இரவு

உன் நினைவு அறுந்த
அந்த பகல்
அதே மீந்த இரவில்
உன் வார்த்தைகளை
கண்டு தோய்கிறேன்

நீயோ எனக்கான
கேள்விகளை
யூகித்து வரிசையாய்
என் இரவில் அடுக்கிறாய்
.
சாளரம் வழி
மேற்கில் மேகங்கள்
கூரை வேய்ந்தது
இருளை அறையிலும்
மெத்தை போர்வைக்குள்ளும்
அடக்கியது
நீயோ வெள்ளை
வெளீரென்று
பகலை என் மீது
திணிக்கிறாய்
.
அயர்ந்த என் பேச்சு
உனக்கு விரசமாய் கேட்க
உன் குதூகலத்தின்
வீரியம் குறைந்து
மௌனம் கமழ்த்தி
உறங்க போகும்
அந்த இரவு
என் மேல் நைந்த
உறக்கத்தை
உடைக்கிறது

No comments:

Post a Comment