Tuesday, November 13, 2012

அவநம்பிக்கையின் காலம்


அவநம்பிக்கை இதோ எனக்கான
காலநிலை யென குறித்து வைத்துகொண்டு
என்னை வந்தடைந்தன
.
மேதாவிலாசங்கள் ஒரு மாயையே எனினும்  
மேதாவிலாசங்கள் உணர்த்த தருணங்கள் கூட உண்டு 
நான் மேதாவிலாசங்கள் அற்றவன் யென 
மேடையில் முழங்குபவனை பார்த்து கேட்க வேண்டும் 
எதற்காக மூச்சு வாங்குகிறாய் யென்று
.
மழைக்கால பிரிவுக்கு பின்பு 
என்னை தொடர்பு கொண்டவர்களிடம் இருந்து
 எந்த குறிப்புகளும் வந்து சேர வில்லை
.
தன் காதலன் பொருள் தேடி
தூர நகர சென்ற பின்
என் குறிப்புக்கள்
அவனை நினைவுபடுத்துவதாக
 என்னுடன் உரையாட வேண்டாம் 
என்கிறாள் ஒருத்தி
.
தேர்ந்த துணையாளனை அடைந்த பின்
என்னை வந்தடைந்த அவளுக்கு
நான் அனுப்பிய குறிப்புகளில் காதல் வழிகிறதாம்
ஊரார் கேட்டால் உன் மாணத்துக்கும் இழிவாகும்
என்கிறாள் இன்னொருத்தி
.
பெண் உடலுக்காக தகிக்கதே
என்கிறாள் இன்னொருத்தி
.
மன சஞ்சலங்கள் அடைந்த பின்
உடலிலும் நோய் பீடிக்கிறது
.
ஏறக்குறைய என் கொடுக்களில் 
விஷத்தின் வீரியம் அதிகமாகி விட்டது 
இழப்புகளின் காலநிலை 
அடுத்து தயாரக இருக்கலாம்
 என்னை வந்தடைய

No comments:

Post a Comment