Sunday, November 4, 2012

இயற்கையை வணங்குவோம்

மலைகளில் நடத்தல்
கால் நோகுதல்
பாதசாரிகளின்றி
இரத்தம் துருத்தி
உப்பிக்கொள்தல்
.
நொடிகளை பகுர்ந்துவிட்டு
மலை உயரத்திலிருந்து
விழும் பிம்பங்கள்
தேகம் இரத்தவாடையோடு
சிதறி போதல்
.
உயர மரங்கள்
காற்றோடு ஒ வென
ஒப்பாரியிடம்
ராட்சத இலைகள்
தரை பார்த்து விழுதல்
மரணம் பிளக்கும்
.
தேகம் உறையும்
கடுகடுப்பு
பாயும் நதி
சேறு சகதியில்
கழற்றும் உறுப்புகளை
மரணம் அப்பிய படி
.
கடலில் நீந்தி
உயிர் குடித்தல்
.
நெருப்பு ஊதும்
பொறி ஒய்ந்த பின்
தேகக் கூடுகள்
பல்லை காட்டும்
.
தொடர்ந்து
மரணம் நிகழ்கிறது
இயற்கையை
வணங்குவோம்

1 comment:

  1. முத்தாய்ப்பான வரிகள் இயற்கையை வணங்குவோம்.

    ReplyDelete