Tuesday, November 13, 2012

இரவின் நதி


நசநசத்த பூஞ்சைகள்
மனித உடல்களில் படரும்
பகல் பொழுதுகளில்
சகிக்க முடியாதவர்கள்
தொடர்ந்து
உதறியெறிகிறார்கள்
மீள் படர்தல்
தொடர்கிறது
சகிக்காத நாற்றத்துடன்
மாலையில்
வீடு அடைகிறார்கள்
குளிர்மையோடு
இரவின் நதியில்
மிதக்கும் அவர்களின்
மேல் படர்ந்த பூஞ்சைகளை
மீன்கள் மெல்ல திங்கும்

No comments:

Post a Comment