Sunday, November 18, 2012

யாசிப்பு

கால் அறுந்த
சிலந்தி ஒன்று
வலை பின்னிய
கிளை யடைய
கிளையாய் இருந்து
தவித்தேன்
அதை உற்சாகப்படுத்த
என் கத்தல்
அதற்கு கேட்பதாயில்லை
காற்றோடு சல்லாபலமிட்டு
கிளை நகர்த்தி
பயனில்லை
என் பதின்மத்தில்
நான் அதே
சிலந்தி யென
நான் தொடர்பு கொண்டவர்கள்
கிளை யென
இருந்திருக்க கூடும்
நானும் கிளை யடைய
தவித்தேன்
கிளை விருப்பமும்
என்னை வந்தடையவில்லை
புலப்படும் காயங்களின்
வலி உணரப்படமால்
நிறைவேற ஏக்கங்கள்
ரணமாகிறது
புரட்டி போட்ட
காலம் கழிய
சிறகு இழந்த
வண்ணத்துப்பூச்சி
கிளை அடைய
நான் தன்மை
இழந்திருந்தேன்


No comments:

Post a Comment