Tuesday, November 13, 2012

என்னுடைய "என் இரவுகளை காலி செய்பவள் " நாவலில் இருந்து ஒரு பக்கம்

ஏறக்குறைய அவளுக்கும் எனக்கும்
என்ன நேர்ந்தது என்பதையே
இருவரும் மறந்து விட்டோம்.
மிதமான விசாரிப்புகளால் என்னை குளிர்வூட்டினாள்.
அது எனக்கு போதுமானதாக இல்லை.
அவளை என் வழியில் செலுத்த வேண்டியிருந்தேன்.
ஆனால் அவளோ என்னை
அவள் வழியில் கட்டியிருந்தாள்.
.
வார இதழுக்காக எழுதிய குறிப்பு ஒன்றை
அவளிடம் காண்பித்தேன்.
" காதல் புரியாத வயதிலே
எனக்கொரு காதல் தோல்வி இருந்திருக்கிறது , தற்போது
நண்பர்களின் காதல் பேச்சுகள் என்னையும்
காதல் தேடியலைய
தூண்டுகின்றது .
இருந்தாலும் வேண்டாம்
ஏனெனில் இறுதியில் அவர்களுக்கு உடைந்த
கிளிஞ்சல்கள் கூட கிடைக்கலாம் " யென்று
எழுதியிருந்தேன்.
எதுவும் சொல்லவில்லை
திருப்பி கொடுத்துவிட்டாள்.
.
என் தேகம் மிதக்கும்
அவள் கண்களை பார்த்தேன்.
எனக்கு சில குறிப்புகள்
கிடைத்தது.
"என்னை காதலிக்கவேயில்லை
என்கிறாயோ . சில நாள்களுக்கு முன்பு என்னை
காதலிப்பதாக சொன்னது சூட்சுமமா ".
தண்டவாளங்கள் பழகும் வரை இரயில் பெட்டிகள்
தடதடக்கிறது

No comments:

Post a Comment