Monday, November 26, 2012

தனிமை படல்களில் தெளிந்த இரத்த துளிகள்

மின்விசிறியின் பேரிச்சரலுடன்
தனிமை சுவர்களில்
அடைப்பட்டு
விபரிதங்களால்
மிதித்து எறியப்படுகின்றதன்
கோர முகம்
.
யோனி கேசம் நீவுதல்
புடைத்தல்
மீள் நெருங்குதல்
ரணமா என்றோ
சுகித்த சாயலா
.
உமிழ் வழி தொண்டையில்
ஊறும் திடமான
எச்சில்
தேகம் பரப்பி வைக்கப்படுகின்றது
.
தடயங்கள் அழித்தல்
பின் வரைதல்
மேல் ஆடை நீக்கி
முலை திருகிய
வழிதடங்களில்
நெட்டுயர்ந்த தண்டில்
மலர் வெடித்து
இரத்த துளிகள் தெறிந்தது
தனிமை படல்களில்
.
இயல்பு திரும்பிய
பொழுது
யூகமானது

No comments:

Post a Comment