Sunday, July 8, 2012

நிலா

காலை நேரங்களிலும் கூட
எந்தவோரு வானிலையையும்
காட்டமால்
அம்மா
வட்டக்கல்லில்
நிலவை சூடுவதோடு இன்றி
அதை இரண்டாக
மடித்து விடுகிறாள்
.
எப்போழுவதாவது
மஞ்சள் கலவையோடு நிலவை
பார்த்ததுண்டு
.
பிறகு வெள்ளை கலவையோடு
நிலா எப்போழுதாவது
.
சில நேரங்களில்
கருக்கி விடுகிறாள்
அப்போழுது
அமாவாசையென
நினைத்து
கொள்கிறேன்.

No comments:

Post a Comment