உன் கவனிப்பின்றி
என் வழிபாதை
அடர் வனமாகிறது
நீ வரும் என் கனவுகளின்
கோப்பு நீட்சியாகிறது
ஆனால் என்னை கவனிக்க கூடாதென்று
திட்டமிட்டு
ஜாக்கிரதையாய்
இருப்பதாக
உன் கண்
சமிக்ஞை செய்கிறது
நீ என்னிடம் தவறவிட்ட
உன் கைக்குட்டையை
நான் முத்தமிடுகிறேன்
நீ எங்கேயிருந்தோ என் ஸ்பரிசத்தை
அனுப்பவிக்கிறாய்
நான் வார்த்தைகளென
நீ உதறிவிடுகிறாய்
நீயோ எனக்கு
மொழியாகிறாய்
No comments:
Post a Comment