பெரும்பாலும் சம்பாஷனைகள்
உன்னிடம்
நலம் விசாரிப்பதில்
தொடங்குகிறது
பிறகு
உன் பணி அலுவலகம்
நிலவரம்
கேட்டு ஆறுதலாகிறேன்
பிறகு
ஒரு முனை
நகற்றுவதாய்
உன் ரகசியம்
அறியும் ஆவலாகி
என் உரையாடல்களை
நெட்டி தள்ளுகிறாய்
மௌனம் கவுத்துகிறாய்
பெரும்பாலும்
அதை உடைப்பதே
சிரமம்
பிறகு
உணவு உட்கொண்டாய்
யென
மிதமான உபசரிப்புகளால்
நீயோ
ஆசுவாசமாகிறாய்
நானோ
துப்பாக்கி குண்டுகள்
வெடித்து தூரத்திய
பிணை கைதியென
மனபிறழ்வுடன்
ஒடுகின்றேன்
பாதை தெரியமால்
No comments:
Post a Comment