Tuesday, August 14, 2012

உன்னோடு சம்பாஷனைகள்

பெரும்பாலும் சம்பாஷனைகள்
உன்னிடம்
நலம் விசாரிப்பதில்
தொடங்குகிறது
பிறகு
உன் பணி அலுவலகம்
நிலவரம்
கேட்டு ஆறுதலாகிறேன்
பிறகு
ஒரு முனை
நகற்றுவதாய்
உன் ரகசியம்
அறியும் ஆவலாகி
என் உரையாடல்களை
நெட்டி தள்ளுகிறாய்
மௌனம் கவுத்துகிறாய்
பெரும்பாலும்
அதை உடைப்பதே
சிரமம்
பிறகு
உணவு உட்கொண்டாய்
யென
மிதமான உபசரிப்புகளால்
நீயோ
ஆசுவாசமாகிறாய்
நானோ
துப்பாக்கி குண்டுகள்
வெடித்து தூரத்திய
பிணை கைதியென
மனபிறழ்வுடன்
ஒடுகின்றேன்
பாதை தெரியமால்

No comments:

Post a Comment