Tuesday, August 14, 2012

கனவுகள்

நிகழ்வுகள்
குளிர் கண்ணாடி
அணியும் கனவுகள்
அதிருப்தியாகவும்
திருப்தியாகவும்
விடிய வைக்கும்
காலையை
முகம் தெரியாதவளுக்கு
வளையல் தேடி
அலையும்
இருண்ட தெருக்களில்
நோய் எதுவும் மின்றி
அன்பானவர்களின்
கை பிணைப்பில்
கிடக்கும்
கமழும் அன்பிற்காக
விஷம் அருந்தி
நடு சாலையில்
கிடத்தும்
நான் மட்டும்
கனவுகளை
பின் தொடர்த்திருத்தால்
அன்பிற்கு ஏங்கி
பலவீனமாகிருப்பேன்

No comments:

Post a Comment