என் பதின்மங்களில்
வெயிலோடு ஒட்டிக்கொண்டிருந்தேன்
எனக்கு உகந்த காலமென்று
தொலைப்பதே மீள் தேடலுக்கு தான் யென
கடந்து வந்திருக்கையில்
எல்லாமுமாக ஒரு பெண்
வந்திருந்திருந்தாள்
அவள் வதன நிழலில்
இளம் பச்சை இலைகளை கொண்ட
தாவரத்தை வளர்த்தேன்
பச்சை கனிகள்
இலைகளுள் மறைந்தது
உதிரும் முதிர் இலைகளை
அள்ளி வீசியெறிந்தேன்
அங்கே கூடுயிடும்
பறவைகளை கண்டு
மகிழ்வுற்றேன்
பின் நாளில்
அவளும் அதே தாவரத்தை
வளர்த்தாகவும்
சில நாட்களில் தளர்ந்துவிட்டதாக
ஒரு இரவில்
கேள்வுயுற்று அதிர்ந்தேன்.
Arumai
ReplyDeleteவதன நிழலில் இளம்பச்சை இலைத் தாவரத்தை வளர்த்தேன். - சூப்பர்! அவளும் அதே வளர்த்து ஓரிரவில் அழித்து விட்டாள்...! கவிதையிலேயே ஒரு குறுங்கதையும் ஒளிந்திருக்கிறதே! உணர்வுகளை மீட்டிய கவி வரிகளுக்கு என் கைதட்டலுடன் கூடிய பாராட்டு!
ReplyDeleteவித்தியாசமாக உள்ளதே.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.