Saturday, March 16, 2013

பேரழகி ( காதல் புனைவு )

அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். கூச்சம் யென்று சொல்லி கொண்டே நிறைய பேச அவளுக்கு தெரிந்து இருக்கிறது. நல்ல வாழக்கையை வழி கொணர பார்க்கும் என்னை , லௌகீகத்தில் விழ செய்வாள் போல. சிநேகமாய் வார்த்தைகளை இறைந்து விடும் அவளது கையை பிணைந்து நீ தான் வேண்டும் யென சொல்ல வேண்டியிருக்கிறது. என்னை உதறிவிடுவாளோ என்ற பயத்தில் விட்டுவிட்டேன்.என் எழுத்துக்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள சிரமபடுகிறாள். மேலும் , நான் கவிஞன் யென்பதையே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் , என்னை பற்றியே விபரங்கள் கேட்கிறாள். அவள் கை அசைவில் புகுந்து , நெற்றி வகிட்டால் அடைபடுகிறது என் உயிர்.

No comments:

Post a Comment