Monday, August 20, 2018

21.8.2018

இரு வருடங்களுக்கு முன்பு
நீ உன் அம்மாவையும்
நான் என் காதலையும்
இழந்திருந்தோம்
மரணம் ஈடு செய்யுமா ?
நான் சாவு ஒன்றே
என்ற மனநிலையில்
இருந்தேன்
சாவுக்கு போகாத
மன தைரியம்
உனக்கு
சகோதரத்துவம் தாண்டிய
நட்பு நம்மிடம் இருந்தது
நட்பை தாண்டி அன்பு ஈர்ப்பு
இருந்தாக தெரியவில்லை
எனக்கு ?
சில காலம்
நாம் உறவு நன்றாக
சென்றுக்கொண்டிருந்தது
சின்ன சின்ன சம்பவங்கள்
ஒரு இரவு
நன்றாக நினைவிருக்கிறது
நீ உன் அம்மாவின் இழப்புகளை
பற்றிய கஷ்டங்களை
என்னிடம் கொட்டிக்கொண்டிருந்தாய்
கேட்டபடி
இந்த வாழ்க்கை நிலையானது
இல்லை
இறப்பை பற்றிய யதார்த்தை
பேசி ஆறுதல் சொன்னேன்
அப்போது நீ உன் சித்தி குடும்பத்தில்
இருந்தாய்
வேலைக்கு போக போவதாக
சொல்லிக்கொண்டிருந்தாய்
நான் யாருக்கும்
சுமையாக இருக்க விரும்பவில்லை
என்பது மையமாக இருந்தது
சில நாட்களிலேயே
நாம் பிரிவு நிகழ்ந்தது
எதிர்பார்க்காதது
நீ என்னோடு இருந்திருக்கலாம்
உன் மொபைல் நம்பரை
தவிரவிட்டது
எவ்வளவு தூரததிஷ்டம்
இழப்பின் வலிகள்
என் நண்பன் அடிக்கடி
நினைவுபடுத்துவான்
அம்மு என்ன ஆனாள்
யென்று
வெறுமனே நாட்கள்
மட்டும் போனது
எந்தவித சுவராசியம்
இல்லாமால்
எந்த பெண் நட்பு
இல்லாமால்
குறிப்பாக நீ இல்லாமால்
பிறகு ஒரு நாள்
விசயம் சொன்னாய்
உனக்கு வரன் பார்த்து
முடிவானதாக...
நல்ல விசயம்
நான் நீ தான்
எனக்கு ஒரே
ஆறுதல் என
திரும்பி வந்தவனுக்கு
அது சரியான அடி
பிறகு நான் பேசிய வார்த்தைகள்
எதற்காகவும்
நீ திரும்பி வருவதாக
இல்லை
இப்போது கூட
தெரியவில்லை
உன் கல்யாணம் பற்றி
நீ திரும்பி வந்திருப்பது
எவ்வளவு பெரிய ஆறுதல்
என்று உனக்கு தெரியாது
நான் எழுதும் ஒவ்வொரு
வார்த்தைகளும்
உன்னை எப்படி
தக்க வைத்துக் கொள்வதற்காக
மட்டும் இருக்கும் ...
நன்றி

No comments:

Post a Comment