என் கண்ணீரை துடைக்க
நீ இல்லை
சக மனிதர்கள் இரு அன்பானவர்கள் விட
தனிமையில் இருபவர்கள்
என்ன பெரிதாய்
வாழ்ந்திட போகிறார்கள்
வாழ்நாள் கொஞ்ச காலம் தான்
வீழ்வோம் எல்லோரும்
இந்த தனிமையான காலத்தின்
வடுகள்
எனக்கு மட்டுமே...
யாரும் இருக்கும் போது
அவர்கள் அருமை தெரியாது
எனக்கும் நீ அப்படியே
எத்தனை பேர்
கேள்விப்படுகிறோம்
பிரிந்தவர்கள் சேரும் போது
நாமும் எவ்வளவு
மகிழ்ச்சி கொள்கிறோம்
அதே நேரங்களில்
நிராசை போன
அனைத்து காதலுக்கும்
நாம் வருந்துகிறோம்
நீயும் என்னோடு
இருந்திருக்கலாம்
சிரிப்பிலிருக்கும் நீ
என்னோடு வலிகள்
ஏதும் அறியபோவதில்லை
கஷ்டமே வரக்கூடாது என
பேராசை எனக்கில்லை
எத்தனை கஷ்டம் வந்தாலும்
நீ இருப்பாய் என்றிருந்தால்
எல்லாம் எவ்வளவு சுலபம்
நான் வேண்டாம் என்றிருப்பவள்
உனக்கும் எனக்கும்
என்ன பந்தம் இருக்கிறது
கர்வம் சிலநேரம்
இந்த இளமையில்
என்னை அதீத அளவில்
நேசித்தது வேறு
யாருமில்லை
ஈடு செய்ய முடியமால்
உன்னையே திரும்ப
நினைக்கிறது மனம்
தனிமையில் கண்ணீர்
போதும் கடவுளே...
No comments:
Post a Comment