Monday, November 26, 2012

தனிமை படல்களில் தெளிந்த இரத்த துளிகள்

மின்விசிறியின் பேரிச்சரலுடன்
தனிமை சுவர்களில்
அடைப்பட்டு
விபரிதங்களால்
மிதித்து எறியப்படுகின்றதன்
கோர முகம்
.
யோனி கேசம் நீவுதல்
புடைத்தல்
மீள் நெருங்குதல்
ரணமா என்றோ
சுகித்த சாயலா
.
உமிழ் வழி தொண்டையில்
ஊறும் திடமான
எச்சில்
தேகம் பரப்பி வைக்கப்படுகின்றது
.
தடயங்கள் அழித்தல்
பின் வரைதல்
மேல் ஆடை நீக்கி
முலை திருகிய
வழிதடங்களில்
நெட்டுயர்ந்த தண்டில்
மலர் வெடித்து
இரத்த துளிகள் தெறிந்தது
தனிமை படல்களில்
.
இயல்பு திரும்பிய
பொழுது
யூகமானது

Sunday, November 18, 2012

யாசிப்பு

கால் அறுந்த
சிலந்தி ஒன்று
வலை பின்னிய
கிளை யடைய
கிளையாய் இருந்து
தவித்தேன்
அதை உற்சாகப்படுத்த
என் கத்தல்
அதற்கு கேட்பதாயில்லை
காற்றோடு சல்லாபலமிட்டு
கிளை நகர்த்தி
பயனில்லை
என் பதின்மத்தில்
நான் அதே
சிலந்தி யென
நான் தொடர்பு கொண்டவர்கள்
கிளை யென
இருந்திருக்க கூடும்
நானும் கிளை யடைய
தவித்தேன்
கிளை விருப்பமும்
என்னை வந்தடையவில்லை
புலப்படும் காயங்களின்
வலி உணரப்படமால்
நிறைவேற ஏக்கங்கள்
ரணமாகிறது
புரட்டி போட்ட
காலம் கழிய
சிறகு இழந்த
வண்ணத்துப்பூச்சி
கிளை அடைய
நான் தன்மை
இழந்திருந்தேன்


அங்கே ஒரு கடல்

சிறுகற்கள் உடல் அழுத்த
மனபிராண்டலுக்கு பின்
உணவு விழுங்கிய
பாறை துண்டு நெளிந்ததால்
விழிக்க
அந்தரத்தில் ஒரு
நீள்கூரை பரந்து கிடந்தது
அங்கு இருந்தது
ஒரு கடல்
கூதலினி
மேல் படர்தல் பற்றி
பேச கேட்ட பின்
அனிச்சையாக
நார்த்தனமாடும்
அவள் கரு விழியைப்
பார்த்தேன்
அங்கு இருந்தது
ஒரு கடல்
தளர்ந்த பாதை
முற்களின் கூடம்
அதற்கு மேல்
சுகித்த தடயங்கள்
அங்கும் இருந்தது
ஒரு கடல்

Tuesday, November 13, 2012

என்னுடைய "என் இரவுகளை காலி செய்பவள் " நாவலில் இருந்து ஒரு பக்கம்

ஏறக்குறைய அவளுக்கும் எனக்கும்
என்ன நேர்ந்தது என்பதையே
இருவரும் மறந்து விட்டோம்.
மிதமான விசாரிப்புகளால் என்னை குளிர்வூட்டினாள்.
அது எனக்கு போதுமானதாக இல்லை.
அவளை என் வழியில் செலுத்த வேண்டியிருந்தேன்.
ஆனால் அவளோ என்னை
அவள் வழியில் கட்டியிருந்தாள்.
.
வார இதழுக்காக எழுதிய குறிப்பு ஒன்றை
அவளிடம் காண்பித்தேன்.
" காதல் புரியாத வயதிலே
எனக்கொரு காதல் தோல்வி இருந்திருக்கிறது , தற்போது
நண்பர்களின் காதல் பேச்சுகள் என்னையும்
காதல் தேடியலைய
தூண்டுகின்றது .
இருந்தாலும் வேண்டாம்
ஏனெனில் இறுதியில் அவர்களுக்கு உடைந்த
கிளிஞ்சல்கள் கூட கிடைக்கலாம் " யென்று
எழுதியிருந்தேன்.
எதுவும் சொல்லவில்லை
திருப்பி கொடுத்துவிட்டாள்.
.
என் தேகம் மிதக்கும்
அவள் கண்களை பார்த்தேன்.
எனக்கு சில குறிப்புகள்
கிடைத்தது.
"என்னை காதலிக்கவேயில்லை
என்கிறாயோ . சில நாள்களுக்கு முன்பு என்னை
காதலிப்பதாக சொன்னது சூட்சுமமா ".
தண்டவாளங்கள் பழகும் வரை இரயில் பெட்டிகள்
தடதடக்கிறது

வார்த்தைகளின் வாசிப்பு

அவளுக்கு கவிதைகள்
மேல் மிகை விருப்பமாம்
.
சில நேரங்களில்
எழுதவும் செய்வலாம்

.
இருவரும் பரஸ்பரம்
தங்கள் கவிதைகள்
மாற்றி வாசித்து கொண்டோம்
.
மீள் வாசிப்பின் சுவராசியம்
அவள் கவிதைகளில் இல்லை
அவள் வார்த்தைகளில்
உண்டு.