" புரிந்து கொள்வது " என்றொரு வார்த்தை. "இவன் இதை செய்ய மாட்டான் ", "இவனால் அது முடியாது" விட்டுக்கொடுப்போம். குடும்பங்களில் உணர்வுபூர்வமாக இது வெளிப்பட்டாலும், நண்பர்களிடம் வினோதமாக வெளிப்படும். இங்கே எப்படி யென்றால் - "பாக்கெட்ல பத்து ரூபாய் கூட இல்லை. நீ எனக்கு
400 ரூபாய் தரனும். உன் நிலைமை எனக்கு புரியுது. ஆனா இப்பவே கொடுத்தா நல்லது. முடியல கண்டிப்பாக அந்த 400 ரூபாய்க்கு மேலே உனக்கு செலவு வைப்பேன்.."
Sunday, September 16, 2018
Fb Status
Saturday, September 15, 2018
பழைய உறவுகளில்
ஏமாற்றத்தையும், துரோகத்தையும்
சந்தித்து பக்குவப்பட்டேன்
புதியதாய் நாம்
சந்திக்கிறோம்
உன் சிரிப்பு
இங்கு மகிழ்ச்சியை
நம்பிக்கையை
ஆழமான தெளிவை
தருகிறது
இத்தனை நாள்களின்
வலிகளுக்கு காயங்களுக்கு
தனிமைக்கு
களிம்பு இடுவதாய்
உன் வரவு
நாம் கைகளை கோர்க்கிறோம்
நாம் இங்கு தொடங்குகிறோம்
அழகான புதிய வாழ்வை
தேடியது ஏதோ ஒன்றை
கிடைத்ததை
Thursday, September 6, 2018
விசனம்
சிறிய விஷயங்களை செய்யும்போது என் கவனம் வர வர மலுங்கி வருகிறது. இது முன்னே இருந்து அப்படிதான். ஒரு விசயத்தை எப்படி முடிபது? எதற்காக செய்கிறோம் ? எப்படி செய்தால் வேலை எளிது.? என்பது எல்லாம் வரவே மாட்டேன் என்கிறது. கவனம் இல்லை, பயம், ஞாபக மறதி, பொறுமை இல்லாதது. சிறிய விசயங்களை பொறுத்த வரை மட்டும். பெரிய விசயங்களில் போதும் நல்ல கவனம் இருக்கிறது. சிறிய விசயத்தை தவறினால் திரும்ப செய்யலாம் என்ற அலட்சியம். நிர்வாகத்தில் இது சறுக்கை ஏற்படுத்தும். சில உதாரணங்கள் : கடைக்கு போகிறேன் காய்கறிகள், மாசாலா வாங்கிறேன். அரிசி வாங்க மறதி வந்தது. ஒரு இரவு XL இரவல் வாங்கி ஹோட்டல் சென்றேன். பார்சல் வாங்கி விட்டு வேறோருவர் XL ஐ சாவி போட்டு எடுக்க பார்த்தேன், அதற்குள் விஷயம் உணர்ந்து விழிப்புக்கு வந்தேன். வேலை தொடர்பாக பேசுகையில், இரண்டு முறை விளக்கம் கேட்டு செய்கிறேன். இது பெரும் தவறு. இது எங்கே போய் முடிய போகிறது என்று தெரியவில்லை.
Tuesday, September 4, 2018
என் காதல்
சுயம் கவிதைகள்
கோபம் படறதுனே தெரியல.
.
சிம்பிள்.
கோபம் வந்தா
கோபம் படு ....
ஓலட்டது மனசு
அதுவும் புதுசா
எதாவது பிரச்சினை
வர வரைக்கும் தான்
அதுக்கு அப்பறம்
முன்னாடி நடந்த
பிரச்சினை பத்தி
ஏன் னெ கூட
கேட்கமாட்டிங்குது...
அதுக்கு வேற வேலையில்லை
உனக்கு வேலையிருக்கா ?
நீ செய்
நான் செய்ச எல்லா தப்பும்
அவன் செய்யனும்
அப்போ தான்
நானும் இன்னும்
நிறைய தப்பு
செய்ய முடியும்
மழையில் நனைய பிடிக்காது.
தூக்கி எறியலாம் தோணுது
என்னையும் கூட.....
அடுத்தவனிடம் கண் மூக்கு வாய் வாங்கி
அவனை போல ஆக முடியாது...
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன் கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது.
எழுத்து
நேரம் போவதற்காக படித்ததுண்டு
எழுதுவதற்காக படித்ததில்லை
சிலதை படித்த மயக்கத்தில்
என்னுடைய சாயலில்
எழுதிப் பார்த்து வெளியிட்டததுண்டு
அப்போதைய மயக்கம் அது
மயக்கம் களைந்து
கிழித்துப் போட்டதுண்டு
காதல் யென்றால்
வலி யுனு சொல்லி
காதல் வெளிப்படுவதை
எழுதுவதே ஆர்வம்
வாழ்க்கையை வேறு விதமாக
எழுதப் பார்க்கிறேன்
எழுதுகிறேனு கர்வம்
வந்ததுண்டு
தூப்பாக்கி கிடைத்தால்
கொலைக்காரன் ஆகியிருப்பேன்
கஞ்சா கிடைத்தால்
போதையில் புரண்டு இருப்பேன்
எழுதுகிறேன் கொலைக்காரனாகவும்
இருக்க முடிகிறது
போதையும் கிடைக்கிறது.
காதல் புனைவு
இது வரை ஆறு யேழு பெண்களை காதலிக்கலாமா முடிவு செய்துதிருக்கிறேன்.மூன்று பெண்களிடம் காதல் சொல்லி மறுக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வாழ்க்கைகான வழி , பெண்ணை பொறுத்து என் வாழ்க்கையும் மாறியிருக்கும்.வாழ்க்கையை நெறிப் படுத்த இந்து,கிறிஸ்தவம்,மூஸ்லீம்,புத்த இத்தனை மதம் இருக்கும் போது , ஒரு பெண்ணுவோட காதலும் முறித்தால் இன்னொரு பெண்ணுவோட காதல் நாம் வாழ்க்கையை நெறிப் படுத்தும்.( இதை என் இப்போதைய காதலி பார்த்தால் எனக்கு பஞ்சர் ஆகும்). இது என்னுடைய அனுபவம். என் வாழ்க்கையில் அந்த சம்பந்தப்பட்ட பெண்ணுகளுக்கும் சாரசரி மூன்று ஆண்டுகளுக்காவது இடைவெளி இருக்கும். ஒரு ஆண்டில் மூன்று காதலும் எற்படவில்லை, மறுக்கப்படவில்லை, கடந்து போகவில்லை. இத்தனைக்கும் குடும்பம் , வாழ்க்கையில் அத்தனை இஷ்டமும் இல்லை. ஒவ்வொரு காதலும் ரசனையானது. அது ஒரு காலம் திரும்பி பார்க்கும் போது இழந்தவானாக பதற்றம் அடைகிறேன்.இருந்தாலும் கடைசியாக நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் , எழுத்தை சொல்லி தந்த அனைத்து பெண்ணுக்களுக்கும். - என்னுடைய முதல் புனைவு இது. இந்த பத்தி உண்மையான ஒன்றாககாவும் , புனைவற்ற தன்மையில் தனிமையில் நிற்கிறது.
Friday, August 31, 2018
ஆகஸ்ட் 25, 2014
பஸ் படியில் தொங்குவது
ஒரு வகை தியானம்
விளிம்பில் ஏன்
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாய் ?
வாழ்க்கை தள்ளி விட்டுறோம்
பயமா
இந்த முறை இருக்கலாம்
அடுத்த முறை இல்லமாலும் போகலாம்
அதுக்காக ...
" டேய் கோ* முதல்ல எறி மேலே வாடா
நவம்பர் 4, 2014
முதல் காதல் என்னை தூக்கி எறியும் போது
பெரிதா வயது ஏதும் இல்லை
இழப்பு , தோல்வி வயது
பார்க்குமா
நினைப்பு மட்டும் நீண்ட நாளுக்குக்காக இருந்தது
பெரிய தொலைவு
பிடிப்பு இல்லாத பெரிய பாலத்தில்
பெரிய ஆபத்தான பயணம்
பிறகு மறுபடியும் வேற காதல்
பீலிங்க் பிரச்சினை தொல்லைக்கு
நிறம் இருக்கு
அது பொண்ணை பொறுத்து
மறுப்படும்
வேற பொண்ணு
வேற பீலிங்கு
வேற பிரச்சினை
வேற தொல்லை
இது பொதுவானது
காதல் காதலி பழகிய பிறகு
போதும் விட்டா போதும் சாமி -நெ
இருக்கும்
ஆகஸ்ட் 30, 2014
முத்தங்கள் பற்றி உனக்கு என்ன ?
நான் உன்னை பட்டினி
போடரனா ?
நீ தான் எங்கிட்ட இருந்து
பிடிக்கிக்கனும்
அது உன் சாமர்த்தியம்
நீ சொல்றதா நம்ப முடியுமா
அப்படியே கழுவிட்டு
அய்யோ பயமா இருக்குனு நழுவுவாறவ நீயாதான்
இருக்க முடியும்
சின்ன சின்ன முத்தங்கள்ல
இத்தனை நாள் பழகின
ஞாபங்ககளை தூக்கிப் போட்டாயே
ம்ம்ம்ம் ... போதுமா
ம்ம்ம்ம் ... போதுமா
எத்தனை முறை கெஞ்சிக்கேட்டாலும்
முத்தத்தை அழுத்தி தர மட்டும்
உனக்கு தெரியவே தெரியாது
ஜூன் 7 , 2015
சண்டை - கவிதை
.
என்னை சுற்றியவர்கள்
யாரும் எனக்கு அவர்கள்
சொன்னபடி நடப்பதில்லை
சில செயல்களின் மூலம்
அதிருப்தியை ஏற்படுத்துகிறார்கள்
நீயும் இப்படியே பிரதிபலித்தால்
தங்கிக்கொள்ள முடியவில்லை
என் முழு கவனமும்
உன் மேல் தான்
நீ சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகளை
நிறைவேற்றாத போது
நமக்குள் சண்டை பிறக்கிறது
இதே போல் தான்
நானும் உனக்கும்
பாதி சண்டை நிறுத்தும் போது
வார்த்தைகள் தொங்கி நிற்க
என்னோடு பேசமால் இருக்க
உன்னால் மட்டும் முடிகிறது
நினைத்தால் விரக்தியாகவும்
பயமாகவும் இருக்கிறது
பெரும்பாலும் எல்லா சண்டையும்
முடிந்த பிறகும்
உன்னோடு பேசவும்
கொஞ்சவும் என்னிடம்
வார்த்தைகள் கிடக்கிறது
உன் கனத்த மௌனம் தான்
வலிக்கிறது...
Thursday, August 23, 2018
24.8.2018
மொட்டை மாடி
பால்கனி
நட்சத்திர வெளி
புகை மாய நிலா
தெரு நிசப்தம்
ஆபிஸ் பிரசர்
தினமும் வன்புணரும்
ஆபிஸ்
ஒரே ஒரு தம்
ஒரு அழுத்தமான
இழுப்பு
புகை தள்ளியும்
கட்டுக்கடங்காத மனம்
மூத்திரம் பேய்கிறேன்
எதிர் மாடி நனையும்
வரை ...
Monday, August 20, 2018
21.8.2018
இரு வருடங்களுக்கு முன்பு
நீ உன் அம்மாவையும்
நான் என் காதலையும்
இழந்திருந்தோம்
மரணம் ஈடு செய்யுமா ?
நான் சாவு ஒன்றே
என்ற மனநிலையில்
இருந்தேன்
சாவுக்கு போகாத
மன தைரியம்
உனக்கு
சகோதரத்துவம் தாண்டிய
நட்பு நம்மிடம் இருந்தது
நட்பை தாண்டி அன்பு ஈர்ப்பு
இருந்தாக தெரியவில்லை
எனக்கு ?
சில காலம்
நாம் உறவு நன்றாக
சென்றுக்கொண்டிருந்தது
சின்ன சின்ன சம்பவங்கள்
ஒரு இரவு
நன்றாக நினைவிருக்கிறது
நீ உன் அம்மாவின் இழப்புகளை
பற்றிய கஷ்டங்களை
என்னிடம் கொட்டிக்கொண்டிருந்தாய்
கேட்டபடி
இந்த வாழ்க்கை நிலையானது
இல்லை
இறப்பை பற்றிய யதார்த்தை
பேசி ஆறுதல் சொன்னேன்
அப்போது நீ உன் சித்தி குடும்பத்தில்
இருந்தாய்
வேலைக்கு போக போவதாக
சொல்லிக்கொண்டிருந்தாய்
நான் யாருக்கும்
சுமையாக இருக்க விரும்பவில்லை
என்பது மையமாக இருந்தது
சில நாட்களிலேயே
நாம் பிரிவு நிகழ்ந்தது
எதிர்பார்க்காதது
நீ என்னோடு இருந்திருக்கலாம்
உன் மொபைல் நம்பரை
தவிரவிட்டது
எவ்வளவு தூரததிஷ்டம்
இழப்பின் வலிகள்
என் நண்பன் அடிக்கடி
நினைவுபடுத்துவான்
அம்மு என்ன ஆனாள்
யென்று
வெறுமனே நாட்கள்
மட்டும் போனது
எந்தவித சுவராசியம்
இல்லாமால்
எந்த பெண் நட்பு
இல்லாமால்
குறிப்பாக நீ இல்லாமால்
பிறகு ஒரு நாள்
விசயம் சொன்னாய்
உனக்கு வரன் பார்த்து
முடிவானதாக...
நல்ல விசயம்
நான் நீ தான்
எனக்கு ஒரே
ஆறுதல் என
திரும்பி வந்தவனுக்கு
அது சரியான அடி
பிறகு நான் பேசிய வார்த்தைகள்
எதற்காகவும்
நீ திரும்பி வருவதாக
இல்லை
இப்போது கூட
தெரியவில்லை
உன் கல்யாணம் பற்றி
நீ திரும்பி வந்திருப்பது
எவ்வளவு பெரிய ஆறுதல்
என்று உனக்கு தெரியாது
நான் எழுதும் ஒவ்வொரு
வார்த்தைகளும்
உன்னை எப்படி
தக்க வைத்துக் கொள்வதற்காக
மட்டும் இருக்கும் ...
நன்றி
Saturday, August 18, 2018
18.08.2018
ஒரு விசனம்
.
சின்ன விஷயங்களின் டேட்டா
அதை தெரிந்துக்கொள்ள முயலாதது
பெரும் அலட்சியமாக வளர்கிறது
இதே பெரிய விசயங்கள்
சிலது நல்லது கூட
சில அற்ப ரகசியங்கள்
அறிந்து கொள்வதன் ஆர்வம்
இரட்டிப்பாக வளர்கிறது ...
Friday, August 10, 2018
10.8.2018
என் கண்ணீரை துடைக்க
நீ இல்லை
சக மனிதர்கள் இரு அன்பானவர்கள் விட
தனிமையில் இருபவர்கள்
என்ன பெரிதாய்
வாழ்ந்திட போகிறார்கள்
வாழ்நாள் கொஞ்ச காலம் தான்
வீழ்வோம் எல்லோரும்
இந்த தனிமையான காலத்தின்
வடுகள்
எனக்கு மட்டுமே...
யாரும் இருக்கும் போது
அவர்கள் அருமை தெரியாது
எனக்கும் நீ அப்படியே
எத்தனை பேர்
கேள்விப்படுகிறோம்
பிரிந்தவர்கள் சேரும் போது
நாமும் எவ்வளவு
மகிழ்ச்சி கொள்கிறோம்
அதே நேரங்களில்
நிராசை போன
அனைத்து காதலுக்கும்
நாம் வருந்துகிறோம்
நீயும் என்னோடு
இருந்திருக்கலாம்
சிரிப்பிலிருக்கும் நீ
என்னோடு வலிகள்
ஏதும் அறியபோவதில்லை
கஷ்டமே வரக்கூடாது என
பேராசை எனக்கில்லை
எத்தனை கஷ்டம் வந்தாலும்
நீ இருப்பாய் என்றிருந்தால்
எல்லாம் எவ்வளவு சுலபம்
நான் வேண்டாம் என்றிருப்பவள்
உனக்கும் எனக்கும்
என்ன பந்தம் இருக்கிறது
கர்வம் சிலநேரம்
இந்த இளமையில்
என்னை அதீத அளவில்
நேசித்தது வேறு
யாருமில்லை
ஈடு செய்ய முடியமால்
உன்னையே திரும்ப
நினைக்கிறது மனம்
தனிமையில் கண்ணீர்
போதும் கடவுளே...
Tuesday, August 7, 2018
07.08.2018
வழக்கமான திங்கள்களில்
வேலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்
வழியெங்கும் கண்ணீர்
வற்றிப்போகும் அளவிற்கான
கண்ணீர்
அந்த அளவில் வலி
என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான
நகர்வு சரியான
திட்டமிடல் இல்லததால்
கைநழுவுகிறது
கடந்த மூன்று ஆண்டுகளில்
ஆசை விருப்பம் தேவை
நிறைவேற்றிக்கொள்ள
முடியாத
தகுதியில்லதாவனாக இருக்கிறேன்
முயற்சி முயற்சிகளாக
ஒரு கட்டத்தில் தோல்வி
திரும்பவும் முயற்சி
மீண்டும் ஏழ முடியாத இழப்பு
என் பணி சூழல்
நான் ஏன் இங்கு
வேலை செய்கிறேன்
கேள்வி பதில் தெரியாதது
என் சமவயதினர்
சமமாக படிப்பை முடித்தவர்களில்
குறைந்த சம்பளத்தில்
வேலையில் இருப்பவன் நான்
ஒருவனே...
குடும்பத்திற்கு கொடுக்க
சரியான பணமில்லை
நினைத்ததை வாங்க முடிவதில்லை
உடுத்த நல்ல உடை
இல்லை
என் முகத்தில்
இழப்பின் வடுக்கள்...
எனது முகம்
இளமைக்கான பிரகாசம் இல்லை
.
கடந்த மாதங்களில் நிகழ்ந்தது இது
சொந்தம் வழியாக
பேசப்பட்ட வரன்
பேசி மறுக்கப்பட்டது
சாம்பத்தியம் குடும்பத்திற்கு போதாது
என தயங்கினாலும்
வாழ்விற்கான விடியலை
எதிர்பார்த்திருந்தேன்
.
இந்த மாதங்களில்
பழைய காதலின் நினைவே
வேறு ஏதும் நிகழாமல்
கர்வம் குறைந்து
அவள் நினைவில்
ஒன்றேன லயிக்கிறேன்
அவள் புகைப்படங்களை புரட்டுவது,
அவள் இருந்த இடங்களை
கடந்து செல்வது
வலியோடு இதமான சுவடுகள்...
அவளை அறிந்த நண்பர்களிடம்
அவள் திருமணம் குறித்து அறிந்துக்கொள்ள
முயல்வது
ஒரு மீள் வதம்.
அதே நேரங்களில்
அவள் பிரிவு இருவருக்கான நன்மை
என்பதில் தெளிவு
நிலைகுலைய செய்கிறது ...
எதையும் பெறுவதற்கான
அதிர்ஷ்டம் இல்லை
உறவில் கூட
இது தொடர்கிறது...
Monday, May 12, 2014
ஒரு பழைய காதல் . . .
*. அவளை முதல் முறை பார்த்தேன்.(2006 - பத்தாவது படிக்கிறேன்).
*.2007,ஜுலை மாதத்தில் மழை இரவில் பேச பார்த்தேன்.மறுத்து நடந்தாள்.
*.எல்லா இடங்களிலும் அவளை பின் தொடர்ந்து செல்வது அவளுக்கு பிடிக்கவில்லை.
*.2008,மார்ச் மாதம் காதல் சொன்னேன்.மறுத்தாள்.
*.ஆதே ஆண்டு செப்டம்பர் மாதம் பேச முயற்சி செய்தேன்.தோல்வி.
*.2009,மார்ச் மாதம் அவளிடம் வேறொரு பெண் வழியாக நெருங்க நினைந்த முயற்சி தோல்வி.
*.அதே ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் பொறியியல் படிக்கும் அவளது மொபைல் நெம்பர் கிடைத்தது.
*. மொபைல் சாட்ங்கில் பேசினோம். நண்பனாக ஏற்றுக்கொண்டாள்.அதிகம் பேசினோம்.
*.2010,ஏப்ரல் மாதம் ஒரு பெட் வைத்தாள்.இந்த ஒரு நாளுக்குள் என்னை பார்த்தாள்,அவளுக்குள் இருப்பது காதலென.என்னை பார்ப்பது நடந்தது.
*. நான் சத்தியம் செய்ய சொன்னேன்.அவள் காதல் இல்லை யென மறுத்தாள். அதற்கு பிறகு நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை.
*.நான் வேறு ஊருக்கு குடிப்பெயர்ந்தேன்.
Monday, April 28, 2014
முகப்பருக்களால் காதல் . . .
உன்னிடம் இரண்டு முகப்பருக்கள். முகம் கழுவும் போது , சோப்பு தேய்க்கையில் வலி ஏற்படுத்துவதாய் உன் முகப்பருக்கள். தொட்டால் ஆ வென வலியால் கைகளை உதறுகிறாள். உன் சமையலில் நீ சேர்க்கும் சுவையைகூட்டும் மசாலாக்களால் உனக்கே பாதிப்பு. உன் பருக்கள் பழுக்கும். கன்னத்தில் முத்தங்கள் வேண்டாம் என்கிறாய். காய்ந்த பருக்களை மென்மையாக முத்தமிடுக்கிறேன். பருக்களுக்கான முத்தம். வலிக்கும் டா ப்ளிஸ் என்கிறாய். திரும்ப ஒரு முறையாயவது தருகிறேன். பொறுத்துக்கொள். உனக்கு வலி யில்லமால் , கன்னங்களால் தீண்டி முகப்பருக்களை எனக்கு மாற்ற முனைக்கிறேன்.
Sunday, April 27, 2014
அனுவிலிருந்து . . . .
சில கணங்கள் நிற்கும் பேருந்து நிறுத்தத்தில் நீ அமர்ந்திருந்திருப்பாய் நான் அமர்ந்திருக்கும் இருக்கை கண்ணாடி சாளரத்தின் வழியே என் பார்வை உன்னை தரிசிக்கிறது நொடிகளை வீணாக்கதவாறு இப்பொழுதே பார் என்னை ஏதோ செய்கிறது நாளை இது நடக்கமாலும் போகலாம் என்ற கெட்ட எண்ணம் நிலையகுலைய செய்ய யாரேனும் என் முன்பு உன்னை மறைந்தால் இந்த காதலில் ஏதோ அபசகுனம் நடந்து விட போவதாக அவநம்பிக்கை ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் என் தேகத்தில் எங்கேயும் கீறினால் துளிர்க்கும் இரத்தத்தில் ஒவ்வொரு அணுவும் உன் பெயர் சொல்லும் அனு எதுவும் தெரியாது இந்த பிரபஞ்சத்தில் இல்லாததாகவும் தேக மரமரத்து போய் மீள்வதற்குள் இவள் பெண்ணா ? ஏதேனும் அற்புதமான ஒன்றா ? மூடி அகன்ற கள்ளு பானையா ? அவள் அந்த வாசனை என்னை மயக்கி போதையின் உச்சத்தின் தலைக்கேரி போதும் யென கொஞ்சலோடு பிடிக்கி அடைத்து வைத்து நான் கெஞ்ச இந்த ஒரு முறை உன்னை முகர்ந்து திழைக்கிறேன் அடுத்த முறை மரணம் என்னை சப்பி போட்டாலும் பரவாயில்லை டேலியாவின் ஒவ்வொரு இதழ்களாக பிடிக்கி வரும் காற்றில் என் நாசியை தொடும் வாசம் அனு நீ இந்த புலம் காலை ஏன் இத்தனை மயக்கம் நிலத்தில் கால்களை ஊன்றி அமர்ந்திருந்திலாய் உன் பாதங்கள் இருக்கம் உணர ஊசி மருந்து செலுத்தி வலி குறையுமே அதே போல் உன் பாதங்களை என் இதழ்களால் நீவி பஞ்சு தேய்த்தலை போல் இனி வலி இருக்கம் ஏற்படமால் செய்ய நான் வரவா நீ இப்பொழுது ஒப்பனைகள் செய்து இருக்கிறாய் தனி அறைக்கு என்னை இழுத்து சென்று உன் மூக்குத்தியை கழட்டி என் கைகளில் கொடுத்து விட்டு இது தான் என் நாசியின் முழு உருவம் யென்று தொடர்ந்து வந்த கொஞ்சல்களை என் மீது திணித்தால் நான் மரணிப்பேனா அது ஜனனமா அப்போது என் உயிர்சக்தியை பிடிங்கி விடு அந்த கனங்கள் எனக்கு போதும் இனி இதை விட அரிய நாள் இனி வாய்க்காது மேன்மை வழியும் உன் வதனம் சில சொற்கள் பிறக்கும் உன் உதடுகளிலிருந்து இப்போதே என்னை கொஞ்சி தீர் என் புருவங்கள் கன்னங்கள் நெற்றி நாசி தாடை கழுத்து வளைவு முடிந்தளவு உன் இதழ்களால் செய்ய முடிந்ததை செய்துக் கொள் என்று சொன்னால் என் உயிர் அனுவே நான் என்ன செய்வேன் முத்த விளையாட்டின் வழி இந்த உலகத்திலே பெரிய காதல் அரங்கேறி காவியமாகும் பொழுது இது தான் அதற்கு பிறகு உன் ஞாபகங்கள் பாதிப்பால் நான் பைத்தியமாவேன் நான் உன்னை மறந்திருப்பேன் நான் பிறந்த சிசு நான் தான் உன்னுடைய அனு நீ அறிமுகம் செய்து சலித்து போவாய் என்ன செய்வதென்று தெரியமால் விழி பிதுக்கி யோசித்துபின் என் புருவங்கள் கன்னங்கள் நாசி தாடை கழுத்து வளைவுகளில் முத்தங்கள் ஏவிய பின் நான் பைத்தியம் தெளியலாம் நீ வியர்த்துபெரு மூச்சு விடலாம.
Friday, April 25, 2014
மான்சியின் பிங்க்
வெள்ளை நிறத்தின் தேவதையான
மான்சி பிங்க் நிறத்தின்
பைத்தியக்காரியாக இருக்கிறாள்
பிங்க் டாப்
பிங்க் பாட்டம்
பிங்க் வளையல்கள்
பிங்க் காதணிகள்
பிங்க் ஸ்டிக்கர் பொட்டுகள்
பிங்க் நெகபாலீஸ்
பிங்க் வார் செருப்புகளென
தினம் ஒன்றை அணிந்தவளாக
ஃபேஸ்ட்வீல் மூடில்
திழைக்க செய்கிறாள்
செர்ரி பழத்தின்
சுவை ஏற்படுத்துகின்ற
அவள் உடலில்
பழுத்திருக்கும் மயக்கு முடுச்சுகள்
பிங்க் நிறத்தில்
இந்த நாளில் புதிதான
கட்ஸூக்களை
அணிந்து வந்து கழட்டி
ஏறிந்தவளின்
பளிங்கு கால்கள்
பிங்க் நிறத்தில்
வியர்த்திருக்கிறது.
.
பிங்க் வார்த்தைகளால் தொடங்கும் மான்சிக்கு
ஒரு அதிர்ச்சியை வைத்திருக்கிறேன்
மான்சிக்கு எதனால் பிங்க் பிடிக்கும் கேட்டபடி
அவளை நெட்டி தள்ளி
முத்தங்கள் ஏய்திய பின்
இந்த ஆழ்ந்த காதலில்
அவளுக்கும் ஈடுபாடாம் என்பேன்