Thursday, March 14, 2013

அவள் வதனத்தில் வளர்ந்த என் பதின்ம மரம்

என் பதின்மங்களில்
வெயிலோடு ஒட்டிக்கொண்டிருந்தேன்
எனக்கு உகந்த காலமென்று
தொலைப்பதே மீள் தேடலுக்கு தான் யென
கடந்து வந்திருக்கையில்
எல்லாமுமாக ஒரு பெண்
வந்திருந்திருந்தாள்
அவள் வதன நிழலில்
இளம் பச்சை இலைகளை கொண்ட
தாவரத்தை வளர்த்தேன்
பச்சை கனிகள்
இலைகளுள் மறைந்தது
உதிரும் முதிர் இலைகளை
அள்ளி வீசியெறிந்தேன்
அங்கே கூடுயிடும்
பறவைகளை கண்டு
மகிழ்வுற்றேன்
பின் நாளில்
அவளும் அதே தாவரத்தை
வளர்த்தாகவும்
சில நாட்களில் தளர்ந்துவிட்டதாக
ஒரு இரவில்
கேள்வுயுற்று அதிர்ந்தேன்.

Saturday, March 2, 2013

She is an english lecturer ( காதல் புனைவு )

அவளோடு நல்ல பழக்கம் எற்பட்ட
சில நாளிலே ,அவளை
பெயர் சொல்லி அழைக்கும்
உரிமை எடுத்ததில்
அவளுக்கு நெருடலாக இருந்திருக்கலாம்.
எப்படியானலும் ஐந்து வயது இளையவன்
அப்படி அழைப்பதை
எந்த பெண்ணும்
ஏற்றுகொள்ளமாட்டார்களே ?
எனக்கு சில காரணம் இருந்தது.
அவள் வார்த்தைகள்
என் கவிதைகளுக்கு கொஞ்சம் தேவைப்பட்டது.
வெளிப்படையாக
அவளிடம் சொல்ல முடியாத பிரச்சினையும் கூட . . .
.
" புத்தகங்கள் நிறைந்த அலமாரியோடு கூடிய
என் பிரத்யேக அறையில்
ஒரு நாளில் அவளோடு பேசி கழிவதாகவும் ,
அந்த நேரத்தில் கூட
அவள் வீட்டில் அவளுக்கு தேர்ந்த
வரன் தேடி யோசித்துக்கொண்டிருக்கலாம் "
என்று புனைவாக ஒரு
கவிதையில் எழுதியிருந்தேன் .
அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.
அது எந்த மாதிரி உணர்வு யென்று
எனக்கு தெரியாது.
அன்றிலிருந்து எங்கள் உறவு
வலுப்பட்டிருக்கலாம்.
.
அவளுக்கு இரண்டு அக்கா.
ஒருவள் உள்ளூர்
கம்பெனி அலுவலகத்திலும் ,
மற்றொருவள் ஐடி கம்பெனியிலும்
வேலைபார்ப்பதற்காக சொன்னாள் .
அதை விட , அவள் அக்காக்களிடம்
என்னை பற்றி சொல்வதற்கு
விஷயம் இருக்கிறது
என்பதை அவள் ஒப்புக்கொண்டதிலிருந்து
அவள் பெயரை சில கணங்களுக்கு மீள் நினைவுறுத்தி
நனைந்துக்கொண்டிருந்தேன்.
.
நான் ஸ்டூடென்ட் என்பதிலிருந்து ,
நான் சந்தித்த சில லெக்சரரிடம் ,
" நீங்க அழகாக இருங்கீங்க " யென சொல்லமுடியாது
ஆனா இவளிடம் சொல்ல முடியும் என்பதிலிருந்து,
கொஞ்சம் அன்பும் கொஞ்சம் கண்டிப்புடன்
சிலரை வழிகாட்டும் அவள் வாழ்க்கையில்
நான் இருப்பதாய் நினைக்கையில் ,
நெருப்புக்குள் குளிர்காய்வதாய் உணர்வுகள் .
.
காதலிக்கிறேனா ? யென தெரியாது .
காதலுக்கு திட்டமிடல் சரியல்ல.
ஒருவேளை அவள் இங்கிலீஷ் லெக்சரர் ஆக
இல்லமாலிருந்தால்
பெரிதாக அவள் மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்காது.
A love from default profession . . .

Monday, February 25, 2013

Is she think about me ? (காதல் புனைவு)

அவளும் நானும் எல்லாம் பேசி பிரிந்து விட்ட பின் , அவள் பொறியியல் கல்லூரியில் ஒன்றில் சேர்ந்திருந்தாள். அநேகமாய் இதமான மாலை வேளைகளில் , கல்லூரி கென பிரத்யேக உடையில் பேருந்து நிலையங்களில் தென்படுவள். உலகத்தில் எவ்வளவோ நல்ல உடைகள் அவளுக்கு பொருந்தலாம், அந்த கல்லூரி உடையும் உடலை பிணைந்திருக்கும் பேக் யென அவளுக்கு கொஞ்சம் ஏற்றதாக இல்லை. ஆனால் கூட அது அழகிற்கு தேசல் கிடையாது . கல்லூரி உடைகள் களைந்து சாதாரண வண்ண உடைகளில் தெருக்களில் எதிர்ப்படும் போது எதோ உணர்ந்திருக்கேன். அதை விட அவள் மாலைகளில் வீடு அடையும் இடைப்பட்ட நேரத்தில் என்னை பற்றி நினைப்பதற்கு எதுவும் கிடைக்கமால் போகுமா யென பயம் மேலூங்குகிறது. இரவு பொழுதில் அவள் தனது அறையில் வெளிச்சங்கள் செலவிட்டு படிக்கும் நேரத்தில் கூட என்னை பற்றி நினைக்கமாட்டாளா ? யென பயத்தோடு வருந்துகிறேன்.

Sunday, February 17, 2013

கிறிஸ்துவ பெண் துறவி

மாலை நேர நகர சாலையில்
ஒரு கிறிஸ்துவ பெண் துறவியை
சந்தித்தேன்
காவி நிற உடை
அவளுக்கு மட்டும்
நீண்ட கை ரவிக்கைகள்
பிரகாசமான வதனம்
பொன்னிற சிலுவை போட்ட செயின்
அகன்ற கழுத்தில்
எல்லா ஆண்களையும்
சகோதரன் யென
அழைக்க தெரிந்திருக்கிறது
சற்றென்று அவள் அறையை பற்றிய
கீற்றலாய் ஒரு எண்ணம்
காய்ந்த இலைகள்
காற்றில் உராயும்
தனிமையான பல நேரங்களை அவள்
அங்கே கடந்திருக்கலாம்.

Monday, January 7, 2013

Small thought about love (காதல் புனைவு)


யாரவது காதல் சாதக விஷயங்களை
பேச வேண்டின்
ஒரே ஒரு பெண்ணை
சார்ந்து பேசுவதாக இருக்க வேண்டும்.
நான் பார்த்தவரை சிலர்
காதல் பற்றிய பார்வையோடு
அதை அணுகியவர்கள் தான்
அதில் சறுக்கியிருக்கிறார்கள்.
இதுலென்ன புதிது தென
தினமும் சண்டையிட்டவர்கள் கூட
வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
.
நானும் வெவ்வேறு கால கட்டங்களில்
மூன்று பெண்களிடம்
காதல் மொழிந்துள்ளேன்,
மூன்றிலும் தோல்வி.
காதலையும் , திருமணத்தையும்
சேர்த்து வைத்து யோசித்ததிலிருந்து
காதல் பக்கம் திரும்பவில்லை.
நான் இன்னும் திருமணத்திற்கு
தயராக வில்லை யென்ற
எண்ணம்.
ஆனால் , எதிர்காலத்தில்
யாரேனும் ஒரு பெண்ணை பார்த்து
எல்லாமே இனி அவள் தான்
என நினைக்க நேரிட்டால்
வேறு வழி கிடையாது
காதலில் விழுந்து தான்
ஆக வேண்டும்.
.
ஒரு பெண் ஆணின்
கையை பிணைந்து
இனிமே நான் தான்
உனக்கு எல்லாமே யென சொல்வது வேறு.
நம் தேடி கண்டுபிடிச்ச
பெண் அதே உணர்வோடு
நம்ம கிட்ட சொல்வதென்பது வேறு.
இந்த மாதிரி விஷயங்களில் தான்
காதல் ஒளிந்திருக்கிறது.