Wednesday, December 25, 2013

தரிகாவிற்கு . . .

அன்புள்ள தரிகாவிற்கு . .
.
என்ன தான் நாம் இனி காதலிக்கலாம் முடிவு செய்தாலும் , இது காதல் தானா ஏற்றுக்கொள்ள உள்ளூர எனக்கு சந்தேகம். நீ தான் என் வாழ்க்கை முழுவதுமாக இருப்பாய் என்பதை நம்பிக்கையாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் எனக்காக நீ செய்யும் விஷயங்களில் இருந்து உன் மேல் எனக்கு துளி நம்பிக்கையும் இல்லை. காதலில் திட்டமிடல் சரியல்ல. மிஞ்சி போனால் எதற்காக உன்னை காதலிக்க வேண்டும் என்று யோசித்து பார்த்தால் , நாம் ஒரு சாதியில் பிறந்ததால் நாம் இணைய சாதி பிரச்சினை இல்லை என்பதாகப்படும். ஆனால் காதல் திருப்தி அளிக்கிற விஷயம். இந்த சில நாட்களாக அந்த திருப்தியான காதல் உன் மேல் ஏற்பட என்னையறியமால் என் மனதை நானே மாற்றிக்கொண்டிருந்தேன் யென்றுதான் நினைக்கிறேன் . மன்னிக்கவும், நீ திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இப்பொழுது தெளிவு பெறுகிறேன். அந்த உணர்வு , அந்த நம்பிக்கை எனக்குள் ஏற்பட கொஞ்சம் நாட்கள் ஆகலாம். கொஞ்ச நாட்கள் பழக அவகாசம் கொடுங்கள். மேலும் உங்களால் முடிந்திருப்பின் , எனக்காக காத்திருக்கவும். மற்றபடி உன்னை எப்பவும் பிடிக்கும். தவறாக எதாவது குறிப்பிட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

No comments:

Post a Comment