Monday, February 25, 2013

Is she think about me ? (காதல் புனைவு)

அவளும் நானும் எல்லாம் பேசி பிரிந்து விட்ட பின் , அவள் பொறியியல் கல்லூரியில் ஒன்றில் சேர்ந்திருந்தாள். அநேகமாய் இதமான மாலை வேளைகளில் , கல்லூரி கென பிரத்யேக உடையில் பேருந்து நிலையங்களில் தென்படுவள். உலகத்தில் எவ்வளவோ நல்ல உடைகள் அவளுக்கு பொருந்தலாம், அந்த கல்லூரி உடையும் உடலை பிணைந்திருக்கும் பேக் யென அவளுக்கு கொஞ்சம் ஏற்றதாக இல்லை. ஆனால் கூட அது அழகிற்கு தேசல் கிடையாது . கல்லூரி உடைகள் களைந்து சாதாரண வண்ண உடைகளில் தெருக்களில் எதிர்ப்படும் போது எதோ உணர்ந்திருக்கேன். அதை விட அவள் மாலைகளில் வீடு அடையும் இடைப்பட்ட நேரத்தில் என்னை பற்றி நினைப்பதற்கு எதுவும் கிடைக்கமால் போகுமா யென பயம் மேலூங்குகிறது. இரவு பொழுதில் அவள் தனது அறையில் வெளிச்சங்கள் செலவிட்டு படிக்கும் நேரத்தில் கூட என்னை பற்றி நினைக்கமாட்டாளா ? யென பயத்தோடு வருந்துகிறேன்.

No comments:

Post a Comment