Monday, January 7, 2013

Small thought about love (காதல் புனைவு)


யாரவது காதல் சாதக விஷயங்களை
பேச வேண்டின்
ஒரே ஒரு பெண்ணை
சார்ந்து பேசுவதாக இருக்க வேண்டும்.
நான் பார்த்தவரை சிலர்
காதல் பற்றிய பார்வையோடு
அதை அணுகியவர்கள் தான்
அதில் சறுக்கியிருக்கிறார்கள்.
இதுலென்ன புதிது தென
தினமும் சண்டையிட்டவர்கள் கூட
வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
.
நானும் வெவ்வேறு கால கட்டங்களில்
மூன்று பெண்களிடம்
காதல் மொழிந்துள்ளேன்,
மூன்றிலும் தோல்வி.
காதலையும் , திருமணத்தையும்
சேர்த்து வைத்து யோசித்ததிலிருந்து
காதல் பக்கம் திரும்பவில்லை.
நான் இன்னும் திருமணத்திற்கு
தயராக வில்லை யென்ற
எண்ணம்.
ஆனால் , எதிர்காலத்தில்
யாரேனும் ஒரு பெண்ணை பார்த்து
எல்லாமே இனி அவள் தான்
என நினைக்க நேரிட்டால்
வேறு வழி கிடையாது
காதலில் விழுந்து தான்
ஆக வேண்டும்.
.
ஒரு பெண் ஆணின்
கையை பிணைந்து
இனிமே நான் தான்
உனக்கு எல்லாமே யென சொல்வது வேறு.
நம் தேடி கண்டுபிடிச்ச
பெண் அதே உணர்வோடு
நம்ம கிட்ட சொல்வதென்பது வேறு.
இந்த மாதிரி விஷயங்களில் தான்
காதல் ஒளிந்திருக்கிறது.

3 comments:

  1. நண்பரே உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் நன்றி .....

    நேரம் இருந்தால் இங்கு வந்து பாருங்கள் ....
    http://blogintamil.blogspot.com/2013/01/2519.html

    ReplyDelete
  2. அருமையான கவிதை ...

    ReplyDelete