Saturday, December 29, 2012

போர்னா வலைதள பெண் தேகம்

சோகத்தின் ரேகைகளென
வெயில் வெளிச்சம்
சாளரம் வழி
கணினி திரையில் விழுந்திருந்தது
.
அவன் தேடி பார்த்த
ஒரு போர்னா வலை தளத்தில்
.
அவளை சார்ந்தவர்களுக்கு
துரோகம் இழைப்பதாக இருந்தாள்
.
அவள் உடைகளோடு
சரீரமும் நனைந்திருந்தது
.
அவள் யோனி காய்ந்திருந்தது
.
பல திணுசுகளில்
அவள் வன்மையாக புணரப்பட்டாள்
.
இவன் முறையில்
.
அவள் குளிக்க நீர் வாரினான்
.
துணி அலமாரியில்
அவனுக்கு பிடித்த
சேலை யொன்றை
அவளுக்காக தேர்ந்தெடுத்தான்
.
மென்மையாக அவளை அணுகினான்
காலத்தை தாமதப்படுத்தி
.
கிளைகள் நீண்டு வளர்ந்த
ஒரு மரத்தின் கீழ் அவன் அமர்ந்திருந்தான்
.
அவள் வீடு இங்கேயே
எங்கேனும் இருக்கலாம்
.
இந்த மதிய வேளையில்
சாளரம் வழி வெயில்
அவள் சரீரத்தில் விழுந்திருக்க
தூங்கி கழித்துக்கொண்டிருப்பாள்




No comments:

Post a Comment