நிலத்தை இரு கூறாக பிரித்து
நதியாழலிருந்த என்னை
தேர்ந்தெடுத்திருந்தது
சிவந்து பழுத்த சூரியன்
சொத சொத வென
ஒப்பியிருந்தது தேகம்
மாமிசம் தின்று விட்டு
மலை முகட்டுக்கு எதிரே பறந்த
பறவையின் அலகிலிருந்து
கிளம்பிய குருதி வாசம்
எனக்கு பசியை நினைவுபடுத்தியது
உடனே நதிமீன்களை கைகளால்
பிடிக்க முயன்று தோற்றேன்
விந்து கசிந்து நனைந்த
ஆடைகளை அலச
அதை திங்க வந்த
மீன்களை ஆடைகளால்
கொய்தேன்
போதுமென கரைக்கு திரும்பி
மேலாடை அவிழ்த்து
செடிகளின் மேல்
உலர காய போடுகையில் தான்
அவன் இருப்பதையே கவனித்தேன்
அன்றிலிருந்து
மேல் ஆடையில்லமால்
அவன் முன் இருக்க
பழகி கொண்டேன்
No comments:
Post a Comment