Monday, October 1, 2012

உன்னை அறியமால்

உன்னை அறிய முடியமால்
ஒத்திகைகளிலே கழிகிறது
காலம்
.
நீயும் கலைக்கிறாய்
ஒழுங்குபடுத்துவதில்லை
நாம் நிகழ்வுகளை
.
எப்போழுதோ முடிவு செய்யபட்டது
"இன்னும் கொஞ்சம்
நாள் ஆகும்
உன்னை புரிந்துக்கொள்வதற்கு "
இன்னும் தொடர்கிறது
.
வண்டிகள் இழுக்கும்
மாடுகள்
வழி அறியாததென
யாரோ நம்மை
வழியில் செலுத்திக்
கொண்டிருக்கலாம்.

No comments:

Post a Comment