Tuesday, October 30, 2012

உன் சம்பாஷணைகளும் மூன்று மீள் நினைவுகளும்

உன் குடியிருப்பு
என் பால்யகால கழிந்த பகுதி
நான் ஒடி ஒய்ந்த
தெருக்களை
மீள் நினைவாக்கினாய்
.
ஒரு திருமண கூடல் நாளில்
மலையருவி கோயிலுக்கு
தோழியின் திருமணத்திற்கு
சென்று பின்
நிகழ்ந்த சம்பாஷணைகள்
மலையருவியின் தாளத்தையும்
குளிர்வையும்
அதே கோயிலின்
மணியோசையையும்
மனம் அகலாதவாறு
மீள் நினைவாகினாய் . . .
.
உன் கரிசனை
மிதக்கும் முகத்தில்
உன் பெரிய கண்களில்
உன் நடத்தைகளில்
என்னுடைய
பால்ய கால
நண்பன் ஒருவன்
அசப்பை காண்கிறேன்
அவனோடு கழித்த நாட்களை
பட்டை தீட்டி
மீள் நினைவாக்கினாய் ...


No comments:

Post a Comment