அவள் உடலில்
இரண்டு மிருதுவான ஆமைகள்
முதுகில் தலைமறைத்து வசிக்கிறது
நான் படிக்கையிலோ அல்லது
ஆதர்ச வேலைகளை ஈடுபடும்போது
எனது தோள்களை உரசும்
உரிமை வாங்கி
என் உடல் பாகங்களில்
ஏறி சிலிர்க்க வைக்கும்
பின் கைப்பிடியளவு திணை கொடுத்து
கொஞ்சி விளையாடுவேன்
நன்றி வயப்பட்டு
எச்சில் ஒழுக்கி
இதம் அளிக்கும்
ஒய்ந்து பின்
தலை மறைக்கும்
இதெல்லாம் அஜாக்ராதையான
பொழுதுகளில் சரி
கோபம் தேகம் படரும்
வேளைகளில்
கிளிஞ்சல்கள் உடைந்து
சிதறுவது போல்
பற்களை கடித்து கீரிச்சிட்டு
என்னை விரட்டவும்
செய்யும்
No comments:
Post a Comment