பத்தி - 1 :
.
பொதுவாக காக்கைகள் உணவுக்காக அலையும் ,
மனிதர்கள் கை ஒங்கினால் பறக்க
பாவனை செய்து பின் அமரும்.
மனிதர்களிடமும் காக்கை தனம்
ஒளிந்துள்ளது .
சாதுர்யமானவர்களின் கேலி பேச்சுகளில் அடிபடும் அப்படிபட்ட
மனிதர்கள் சம்பவ இடங்களிலிருந்து மீள
முயன்று பின் தன்
காக்கைகள் அல்ல என்பதை உணர்ந்து
எதிர்த்து பேசி திரும்பவும்
தோற்கிறார்கள் .
நானும் கூட சில நேரங்களில்
சாதுர்யமானவர்களில் வார்த்தைகளால் அடிபட்டுருக்கேன் .
விரட்டபட்டுருக்கேன் . அவர்களின் தலை மறைந்த பின்,
தன்னை விட தழைத்தவர்களை வார்த்தைகளால் விரட்டியிருக்கேன் .
அவர்களும் காக்கை தனம் கொண்டு
பறக்க பாவனை பின் செய்து அமர்வார்கள் .
அப்படிபட்ட காக்கை தனம் கொண்ட மனிதர்களை ஒரு நாளும்
பார்த்ததில்லை உணவுக்காக அலைந்ததை.
No comments:
Post a Comment